3. உள்ளத்தின் சீர்

I. பலவுள் தெரிக.

1. பொருந்தாத இணை எது?

  1. ஏறுகோள் – எருதுகட்டி
  2. திருவாரூர் – கரிக்கையூர்
  3. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
  4. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

விடை : திருவாரூர் – கரிக்கையூர்

2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

  1. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
  2. தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
  3. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
  4. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

3. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று –

  1. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
  2. புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
  3. எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
  4. பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

  1. திசைச்சொற்கள்
  2. வடசொற்கள்
  3. உரிச்சொற்கள்
  4. தொகைச்சொற்கள்

விடை : தொகைச்சொற்கள்.

5. சொற்றொடர்களை முறைப்படுத்துக.

அ) ஏறுதழுவுதல் என்பதை      ஆ) தமிழ் அகராதி     இ) தழுவிப் பிடித்தல் என்கிறது

  1. ஆ – அ – இ
  2. ஆ – இ – அ
  3. இ – ஆ – அ
  4. இ – அ – ஆ

விடை : ஆ – அ – இ

II. வல்லினம் மிகலாமா?

  1. பெட்டிச்செய்தி
  2. விழாக்குழு
  3. கிளிப்பேச்சு
  4. தமிழ்த்தேன்
  5. தைப்பூசம்
  6. கூடக்கொடு
  7. கத்தியை விடக்கூர்மை
  8. கார்ப்பருவம்

III. தொடர் தரும் பொருளைக் கூறுக.

1. சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி

சின்ன கொடி – சிறிய கொடி

2. தோப்புக்கள் – தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்

தோப்புகள் – பல மரங்கள் சேர்ந்தது தோப்புகள்

3. கடைப்பிடி – கொள்கையைக் கடைபிடிப்பது

கடைபிடி – வாணிகம் தொடங்கக் கடை பிடிப்பது

4. நடுக்கல் – அடையாளமாக நடுவது நடுக்கல்

நடுகல் – நினைவுச்சின்னம்

5. கைம்மாறு – உதவி செய்தல்

கைமாறு – கையில் உள்ள மாறு (விளக்குமாறு)

6. பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்

பொய் சொல் – பொய் சொல்வது தவறு

IV. பொன்மொழிகளை மொழிபெயர்க்க.

1. A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi

விடை: ஒரு நாட்டின் பண்பாடானது மக்களின் இதயங்களிலும், ஆன்மாவிலும் தங்கியுள்ளது

2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

விடை: மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – ஜவஹர்லால் நேரு

3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa

விடை: அன்புக் குறைவும், தொண்டுப் பற்றாக்குறையும் தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனை – அன்னைதெராசா

4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam

விடை: உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள் – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera

விடை: வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செயவதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் – ஷிவ் கேரா

V. வடிவம் மாற்றுக.

பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.

1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

விடை :

தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

VI. மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. மேடும் பள்ளமும் – மனித மேடும் பள்ளுமும் நிறைந்தது

2. நகமும் சதையும் – நண்பர்கள் எப்போதும் நகையும் சதையும் போல இருக்கின்றனர்.

3. முதலும் முடிவும் – இறைவன் கையில் தான் முதலும் முடிவும் உள்ளது

4. கேளிக்கையும் வேடிக்கையும் – திரைப்படங்கள் கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்தது

5. கண்ணும் கருத்தும் – நம் செயலில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்

VII. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.

அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?

விடை : காங்கேயம் இனக்காளைகள்

ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?

விடை : காங்கேயம் இனக்காளைகள்

இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?

விடை : காங்கேயம் இனக்காளைகள்

ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?

விடை : காங்கேயம் இனக்காளைகள்

2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

  1. கர்நாடகம்
  2. கேரளா
  3. இலங்கை
  4. ஆந்திரா

விடை : இலங்கை

3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  1. கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
  2. கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
  3. கண்டெடுக்க + பட்டு + உள்ளன
  4. கண் + டெடுக்க + பட்டு + உள்ளன

விடை : கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன




4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள்
போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?

  1. வினாத்தொடர்
  2. கட்டளைத்தொடர்
  3. செய்தித்தொடர்
  4. உணர்ச்சித்தொடர்

விடை : செய்தித்தொடர்

VIII. பொருள் எழுதித் தொடரமைக்க.

கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;

அலைகடலலைஇன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.
அழைவரவழைத்தல்என் நண்பர்களை வரவழைத்துள்ளேன்
கரைஆற்றின் ஓரம்ஆற்றங்கரையை பலபடுத்த பனைமரங்கள் வளர்க்ப்படுகின்றன
கறைபடிவது கறை துணியில் கறை படிந்துள்ளது
குளவிபூச்சி வகைகளுள் ஒன்றுகுளவி வீட்டின் நிலைப்படியில் கூடுகட்டுகிறது
குழவிகுழந்தைகுழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்)
வாளைமீன் வகைகளில் ஒன்றுஆற்றில் வாளை மீன் துள்ளிக் குதித்தது
வாழைவாழைப்பழம்முக்கனிகளுள் ஒன்று வாழைப்பழம்
பரவைபரந்துள்ள கடல்மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றார் பரவை
பறவைபறப்பவைபறவைகள் பறந்து சென்றன
மரைதாமரைதாமரை நீர் நிலையில் மலரும்
மறைவேதம்வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன

IX. பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.

காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.

  1. வைக்காதீர்கள்
  2. மலைக்காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
  3. மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
  4. மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்

X. குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

2. விழாவறை காதை குறிப்பிடும் விழா (6) இந்திரவிழா

5. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளது (3) தவறு

7. பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று (7) தவளை ஓட்டம்

10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் (2) விதி

13. மா + அடி – இதன் புணர்ந்த வடிவம் (3) மாவடி

19. கொள்ளுதல் என்பதன் முதல்நிலை திரிந்த சொல் (2) கோள்

வலமிருந்து இடம்

9. தூய்மை யற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் (2) சிரை

11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் (3) ஆய்வு

12. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் (5) சாத்தனார்

18. தனி + ஆள் -சேர்த்து எழுதுக. (4) தனியாள்

மேலிருந்து கீழ்

1. தமிழர்களின் வீர விளையாட்டு (7) ஏறு தழுவுதல்

2. இவள் + ஐ – சேர்ந்தால் கிடைப்பது (3) இவளை

3. மரத்தில் காய்கள் … … . . ஆகக் காய்த்திருந்தன (4) திரட்சி

5. உரிச்சொற்களுள் ஒன்று (2) தவ

6. …………..சிறந்தது (2) சால

8. நேரத்தைக் குறிப்பிடும் வானியல் சொல் (2) ஓரை

12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை (4)

15. காய் பழுத்தால் ………(2) கனி

கீழிருந்து மேல்

14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது (3) வத்தி

17. யா முதல் வரும் வினாப்பெயர் (2) யார்

18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது (4) தக்கார்

திருக்குறள்

I. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.

அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை

விடை :-

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை

II. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

பாடல்
ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.

(1893 – ல் பாரதியாரின் பதினோராவது வயதில் எட்டையபுரம் மன்னர் சமஸ்தானப் புலவர்கள் அவையில், அவரது கவித்திறனைப் புகழந்து “பாரதி” என்ற பட்டத்தை சூட்டினார்,)

குறள்

அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

விடை :-

ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

பொருள்:-

நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி ” இவருக்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி பெற வேண்டும். (பொறையுடைமை – 8வது குறள்

III. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.

  1. பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று – ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
  2. தத்தம் கருமமே கட்டளைக்கல் – அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
  3. அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதை ப் போல

விடை : 1 -இ, 2 – அ, 3 – ஆ

4. தீரா இடும்பை தருவது எது?

  1. ஆராயாமை, ஐயப்படுதல்
  2. குணம், குற்றம்
  3. பெருமை, சிறுமை
  4. நாடாமை, பேணாமை

விடை : ஆராயாமை, ஐயப்படுதல்

5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ. நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்
ராமு நுணங்கிய கேள்வியராக விளங்கினான்

ஆ. பேணாமை – பாதுகாக்காமை
உழவனால் பேணாத பயிர் வீணாகும்

இ. செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு
செவிச்செல்வம் பெற்றவர் சாதனையாளராக உருவாகின்றனர்

ஈ. அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்
காந்தியடிகள் அறனல்ல செய்கைகளைச் செய்யாதவர்.


Comments

Popular posts from this blog

6th Tamil Solutions Chapter 1.1 இன்பத்தமிழ்

பூலித்தேவன் பற்றிய குறிப்புகள்..!

ஓன்பதாம் வகுப்பு தமிழ் 1.1. திராவிட மொழிக்குடும்பம் Ninth Class Tamil 1.1. Dravidian language family