ஓன்பதாம் வகுப்பு தமிழ் 2. உயிருக்கு வேர்

ஓன்பதாம் வகுப்பு தமிழ்

2. உயிருக்கு வேர்

I. பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.

அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ______________ மொழியாகும்.

விடை : வேறுபடுத்துவது

ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) _____________ .

விடை : பெற்றிருக்கின்றன

இ காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) _____________ மொழி தமிழ்.

விடை : புதுபித்துக் கொள்ளும்

ஈ) என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) ___________.

விடை : தேடிக் கொண்டிருக்கிறேன்

II. கீழ்க்காணும் துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.

  1. வேண்டும் – சான்றோர் காட்டிய பாதையில் நடக்க வேண்டும்
  2. பார் – படத்தை உற்றுப் பார்
  3. உள் – கடல் நீரினை உள்வாங்கியது
  4. வா – நாளை என் வீட்டுக்கு வா
  5. விடு – நான் நாளை பள்ளிக்கு வந்து விடுவேன்

III. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணைவினைகளை இட்டு எழுதுக

மார்னிங் எழுந்து -காலையில் எழுந்து

பிரஷ் பண்ணி- பல்துலக்கி

யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள் – சீருடை அணிந்து பள்ளிக்கு போனாள்

IV. பலவுள் தெரிக.

1. “மிசை” – என்பதன் எதிர்ச்சொல் என்ன ?

  1. கீழே
  2. மேலே
  3. இசை
  4. வசை

விடை : கீழே

2. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது ?

  1. அகழி
  2. ஆறு
  3. இலஞ்சி
  4. புலரி

விடை : புலரி

3. பொருத்தமான விடையைத் தேர்க.

அ. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ. நீரின்று அமையாது யாக்கை – ஔவையார்
இ. மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்

  1. அ, இ
  2. ஆ, இ
  3. அ, ஆ
  4. அ, ஆ, இ

விடை : அ, இ

4. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக —————. அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ————–.

  1. வந்தான் , வருகிறான்
  2. வந்துவிட்டான், வரவில்லை
  3. வந்தான் , வருவான்
  4. வருவான், வரமாட்டான்

விடை : வந்துவிட்டான், வரவில்லை

5. மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

  1. மறுமை
  2. பூவரசு மரம்
  3. வளம்
  4. பெரிய

விடை : வளம்

V. இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

மொழி பெயர்க்க : எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது

பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek

மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்

பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

மொழி பெயர்க்க : அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்

பழமொழி : நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை

4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்


VI. பிழை நீக்கி எழுதுக.

1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.

விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கின்றனர்.

5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

விடை : சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.

VII. பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

விடை : நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.

2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

விடை : தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

விடை : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது

விடை : கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.

VIII. சொல்லுக்குள் சொல் தேடுக.

எ.கா. ஆற்றங்கரையோரம் – ஆறு, கரை, ஓரம்

  1. கடையெழுவள்ளல்கள் – கடை, ஏழு, வள்ளல்கள்
  2. எடுப்பார்கைப்பிள்ளை – எடு, பார், கை, பிள்ளை
  3. தமிழ்விடுதூது – தமிழ், விடு, தூது
  4. பாய்மரக்கப்பல் – பாய், மரம், கப்பல்
  5. எட்டுக்கால்பூச்சி – எட்டு, கால், பூச்சி

IX. அகராதியில் காண்க.

  1. கந்தி – கழுகு, வாசம், கந்தகம், தவப்பெண்
  2. நெடில் – நீளம், மூங்கில், நெட்டெழுத்து
  3. பாலி – ஆலமரம், அணை, எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கரை
  4. மகி – பூமி, பசு
  5. கம்புள் – சங்கு, கம்பங்கோழி, வானம்பாடி
  6. கைச்சாத்து – கையொப்பம், பொருள்பட்டி

X. வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.

முதல்வினைகள் – பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.

(எ.கா.) பார்த்தேன்

  1. எழுதிப் பார்த்தான்
  2. தடுக்கப் பார்த்தான்
  3. கொடுத்துப் பார்த்தான்
  4. ஓடப் பார்த்தான்

1. கொடுத்தார்

  1. எழுதிக் கொடுத்தார்
  2. படிக்கக் கொடுத்தார்
  3. வாங்கிக் கொடுத்தார்
  4. பார்த்துக் கொடுத்தார்

2. நடந்தான்

  1. பார்த்து நடந்தான்
  2. கேட்டு நடந்தான்
  3. வாங்கி நடந்தான்
  4. சிரித்து நடந்தான்

3. சேர்ந்தான்

  1. வந்து சேர்ந்தார்
  2. போய்ச் சேர்ந்தார்
  3. நடந்து சேர்ந்தார்
  4. ஓய்ந்து சேர்ந்தார்

4. அமைத்தாேம்

  1. பார்த்து அமைத்தோம்
  2. கண்டு அமைத்தோம்
  3. கேட்டு அமைத்தோம்
  4. ஓய்ந்து அமைத்தோம்

XI. வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைந்த தொடர்களாக உருவாக்குக.

வினையடி – வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு.

(எ.கா.) வினையடி – வை

முதல்வினைதுணைவினை
மூட்டையைத் தலையில் வைத்தான். இலையில் இனிப்பை வைத்தனர்.அம்மா குழந்தையைத் தூங்க வைத்தார்.
நான் உனக்கு ஒரு நூல் வாங்கி வைத்தேன்.
எதற்கும் சொல்லி வை.
வினையடிமுதல்வினைதுணைவினை
வாநீ நாளை வீட்டுக்கு வாஆங்கிலேயர் நம்மை ஆண்டு வந்தனர்
போநான் நூலகத்துக்குப் போனேன்நான் பயந்து போனேன்
செய்அவன் அதைச் செய்தான்அவன் அதைச் செய்ய வைத்தான்
மாற்றுஅவன் கடையை மாற்றினான்அவன் கடையை மாற்றச் செய்தான்
இருநான் தனியாக இருந்தேன்அவனை தனியாக இருக்கச் செய்தேன்
கொடுஅவள் கொடுத்தாள்அவளுக்குக் கொடுக்க செய்தான்

XII. கலைச்சொல் அறிவோம்

  1. குமிழிக் கல் – Conical Stone
  2. நீர் மேலாண்மை – Water Management
  3. பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
  4. வெப்ப மண்டலம் – Tropical Zone


Comments

Popular posts from this blog

6th Tamil Solutions Chapter 1.1 இன்பத்தமிழ்

பூலித்தேவன் பற்றிய குறிப்புகள்..!

ஓன்பதாம் வகுப்பு தமிழ் 1.1. திராவிட மொழிக்குடும்பம் Ninth Class Tamil 1.1. Dravidian language family