ஓன்பதாம் வகுப்பு தமிழ் 2. உயிருக்கு வேர்
ஓன்பதாம் வகுப்பு தமிழ்
2. உயிருக்கு வேர்
I. பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ______________ மொழியாகும்.
விடை : வேறுபடுத்துவது
ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) _____________ .
விடை : பெற்றிருக்கின்றன
இ காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) _____________ மொழி தமிழ்.
விடை : புதுபித்துக் கொள்ளும்
ஈ) என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) ___________.
விடை : தேடிக் கொண்டிருக்கிறேன்
II. கீழ்க்காணும் துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.
- வேண்டும் – சான்றோர் காட்டிய பாதையில் நடக்க வேண்டும்
- பார் – படத்தை உற்றுப் பார்
- உள் – கடல் நீரினை உள்வாங்கியது
- வா – நாளை என் வீட்டுக்கு வா
- விடு – நான் நாளை பள்ளிக்கு வந்து விடுவேன்
III. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணைவினைகளை இட்டு எழுதுக
மார்னிங் எழுந்து -காலையில் எழுந்து
பிரஷ் பண்ணி- பல்துலக்கி
யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள் – சீருடை அணிந்து பள்ளிக்கு போனாள்
IV. பலவுள் தெரிக.
1. “மிசை” – என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
- கீழே
- மேலே
- இசை
- வசை
விடை : கீழே
2. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது ?
- அகழி
- ஆறு
- இலஞ்சி
- புலரி
விடை : புலரி
3. பொருத்தமான விடையைத் தேர்க.
அ. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ. நீரின்று அமையாது யாக்கை – ஔவையார்
இ. மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
- அ, இ
- ஆ, இ
- அ, ஆ
- அ, ஆ, இ
விடை : அ, இ
4. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக —————. அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ————–.
- வந்தான் , வருகிறான்
- வந்துவிட்டான், வரவில்லை
- வந்தான் , வருவான்
- வருவான், வரமாட்டான்
விடை : வந்துவிட்டான், வரவில்லை
5. மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
- மறுமை
- பூவரசு மரம்
- வளம்
- பெரிய
விடை : வளம்
V. இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval
மொழி பெயர்க்க : எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது
பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்
பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்
3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
மொழி பெயர்க்க : அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்
பழமொழி : நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை
4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson
மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.
பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்
VI. பிழை நீக்கி எழுதுக.
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.
3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கின்றனர்.
5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
விடை : சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.
VII. பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
விடை : நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.
2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
விடை : தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.
3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
விடை : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்
4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது
விடை : கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.
VIII. சொல்லுக்குள் சொல் தேடுக.
எ.கா. ஆற்றங்கரையோரம் – ஆறு, கரை, ஓரம்
- கடையெழுவள்ளல்கள் – கடை, ஏழு, வள்ளல்கள்
- எடுப்பார்கைப்பிள்ளை – எடு, பார், கை, பிள்ளை
- தமிழ்விடுதூது – தமிழ், விடு, தூது
- பாய்மரக்கப்பல் – பாய், மரம், கப்பல்
- எட்டுக்கால்பூச்சி – எட்டு, கால், பூச்சி
IX. அகராதியில் காண்க.
- கந்தி – கழுகு, வாசம், கந்தகம், தவப்பெண்
- நெடில் – நீளம், மூங்கில், நெட்டெழுத்து
- பாலி – ஆலமரம், அணை, எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கரை
- மகி – பூமி, பசு
- கம்புள் – சங்கு, கம்பங்கோழி, வானம்பாடி
- கைச்சாத்து – கையொப்பம், பொருள்பட்டி
X. வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.
முதல்வினைகள் – பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.
(எ.கா.) பார்த்தேன்
- எழுதிப் பார்த்தான்
- தடுக்கப் பார்த்தான்
- கொடுத்துப் பார்த்தான்
- ஓடப் பார்த்தான்
1. கொடுத்தார்
- எழுதிக் கொடுத்தார்
- படிக்கக் கொடுத்தார்
- வாங்கிக் கொடுத்தார்
- பார்த்துக் கொடுத்தார்
2. நடந்தான்
- பார்த்து நடந்தான்
- கேட்டு நடந்தான்
- வாங்கி நடந்தான்
- சிரித்து நடந்தான்
3. சேர்ந்தான்
- வந்து சேர்ந்தார்
- போய்ச் சேர்ந்தார்
- நடந்து சேர்ந்தார்
- ஓய்ந்து சேர்ந்தார்
4. அமைத்தாேம்
- பார்த்து அமைத்தோம்
- கண்டு அமைத்தோம்
- கேட்டு அமைத்தோம்
- ஓய்ந்து அமைத்தோம்
XI. வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைந்த தொடர்களாக உருவாக்குக.
வினையடி – வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு.
(எ.கா.) வினையடி – வை
முதல்வினை | துணைவினை |
மூட்டையைத் தலையில் வைத்தான். இலையில் இனிப்பை வைத்தனர். | அம்மா குழந்தையைத் தூங்க வைத்தார். நான் உனக்கு ஒரு நூல் வாங்கி வைத்தேன். எதற்கும் சொல்லி வை. |
வினையடி | முதல்வினை | துணைவினை |
வா | நீ நாளை வீட்டுக்கு வா | ஆங்கிலேயர் நம்மை ஆண்டு வந்தனர் |
போ | நான் நூலகத்துக்குப் போனேன் | நான் பயந்து போனேன் |
செய் | அவன் அதைச் செய்தான் | அவன் அதைச் செய்ய வைத்தான் |
மாற்று | அவன் கடையை மாற்றினான் | அவன் கடையை மாற்றச் செய்தான் |
இரு | நான் தனியாக இருந்தேன் | அவனை தனியாக இருக்கச் செய்தேன் |
கொடு | அவள் கொடுத்தாள் | அவளுக்குக் கொடுக்க செய்தான் |
XII. கலைச்சொல் அறிவோம்
- குமிழிக் கல் – Conical Stone
- நீர் மேலாண்மை – Water Management
- பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
- வெப்ப மண்டலம் – Tropical Zone
Comments
Post a Comment